என் மலர்
இந்தியா

ஜம்மு காஷ்மீர்: கத்ராவிலிருந்து ஸ்ரீநகருக்கு முதல் வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம்
- காஷ்மீர் பள்ளத்தாக்கின் குளிர்ந்த காலநிலையைத் தாங்கும் வகையில் இந்த ரெயில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு அதிக பயண வசதியை வழங்க அமைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர்:
ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி ரெயில் நிலையத்திலிருந்து ஸ்ரீநகருக்கு முதல் வந்தே பாரத் ரெயிலின் சோதனை ஓட்டத்தை இந்திய ரெயில்வே தொடங்கியது.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் குளிர்ந்த காலநிலையைத் தாங்கும் வகையில் இந்த ரெயில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரெயில் இந்தியாவின் முதல் கேபிள் தங்கு ரெயில் பாலமான அஞ்சி காட் பாலம் மற்றும் உலகின் மிக உயரமான ரெயில் பாலமான செனாப் பாலம் வழியாகவும் செல்லும்.
இதன் முதல் பயணத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்த புதிய ரெயில் சேவையானது ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான தொடர்பை மேம்படுத்தவும், சுற்றுலாவை மேம்படுத்தவும், யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு அதிக பயண வசதியை வழங்கவும் அமைக்கப்பட்டுள்ளது.
Next Story