

பனாஜி:
இந்திய கடலோர காவல் படையினர் கோவா கடற்பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மீன்பிடி வலையில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கடல் ஆமையை கடலோர காவல் படையினர் பார்த்தனர்.
உடனடியாக அந்த ஆமையை மீட்டு, வலையில் இருந்து விடுவித்து மீண்டும் கடலில் விட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.