ஐதராபாத் நால்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: தலைமை நீதிபதி வருகைக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு!

அமைதியான வழியில் போராடிய மாணவர்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் தார்மீக ரீதியாக ஏற்புடையதல்ல என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
NALSAR University -Surya Kanth
Published on

ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற தேசிய சட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகத்தின் (NALSAR) 2026-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவிற்கு, இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்தை முதன்மை விருந்தினராக அழைத்துள்ளதற்கு 450-க்கும் மேற்பட்ட இறுதி ஆண்டு மாணவர்கள் அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பதிவாளர் மற்றும் பேராசிரியர்களுக்கு மாணவர்கள் எழுதியுள்ள கூட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்,

ஜந்தர் மந்தர் போராட்டம் மீதான விசாரணை

ஜூலை 20, 2026 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை தாக்குதல் தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி சூர்யா காந்த் கையாண்ட விதம் தங்களுக்கு ஏமாற்றமளிப்பதாக மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீதிமன்றத்தின் அணுகுமுறை

விசாரணையின் போது காவல்துறை வன்முறை தொடர்பான வீடியோ ஆதாரங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள மறுத்தது மற்றும் அமைதியான வழியில் போராடிய மாணவர்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் தார்மீக ரீதியாக ஏற்புடையதல்ல என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்டங்களைப் பெற மறுப்பு

அரசமைப்புச் சட்ட மதிப்புகள் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட நீதிபதியிடமிருந்து பட்டங்களைப் பெறத் தங்களுக்கு விருப்பமில்லை என்றும், விருந்தினர் முடிவை நிர்வாகம் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தற்போதைய நிலை

சட்டக் கல்வியில் முதன்மை நிறுவனமாக விளங்கும் நால்சார் பல்கலைக்கழக மாணவர்களின் இந்த எதிர்ப்பு நடவடிக்கை, கல்வி மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இருப்பினும், இக்கோரிக்கை குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ முடிவையும் அறிவிக்கவில்லை.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com