search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அயோத்தி ராமர் கோவிலில் உள்ள சீதாதேவிக்கு தங்க சரிகை பட்டு சேலை
    X

    அயோத்தி ராமர் கோவிலில் உள்ள சீதாதேவிக்கு தங்க சரிகை பட்டு சேலை

    • கணவன் மனைவி இருவரும் இணைந்து அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலில் உள்ள சீதாதேவிக்கு தங்க சரிகை சேலை நெய்து சாதனை படைத்துள்ளனர்.
    • ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

    திருப்பதி:

    தெலங்கானா மாநிலம், சிர்சில்லா ஜவுளி நகரத்தைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத். பட்டு நெசவு தொழிலாளி. இவரது மனைவி ரேகா.

    கணவன் மனைவி இருவரும் இணைந்து அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலில் உள்ள சீதாதேவிக்கு தங்க சரிகை சேலை நெய்து சாதனை படைத்துள்ளனர்.

    8 கிராம் தங்கம், 20 கிராம் பட்டு இழைகள் கொண்டு 20 நாட்களில் பட்டுப் சேலை விஷேசமாக தயார் செய்துள்ளனர்.

    அதில் ஸ்ரீராமரின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

    புடவையின் ஒரு புறத்தில் அயோத்தி ராமர் கோவில், ஸ்ரீராம பட்டாபிஷேகம் மற்றும் ஜெய் ஸ்ரீராம் என தெலுங்கிலும், மறுபுறம் ஜெய் ஸ்ரீராம் என இந்தியிலும் நெய்யப்பட்டுள்ளன.

    ஸ்ரீராமரின் படங்கள் புடவையின் விளிம்பில் வைக்கப்பட்டு, சேலையின் மீதமுள்ள பகுதி ஸ்ரீ ராமர் பிறந்தது முதல் முடிசூட்டு விழா வரையிலான ராமாயண காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    இவ்வளவு சிறப்பு அம்சங்களுடன் நெய்யப்பட்டுள்ள பட்டுப் புடவையை வரும் ஜனவரி 26-ந் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடியிடம் காட்டுகின்றனர்.

    பின்னர், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

    Next Story
    ×