search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகா தேர்தலை முன்னிட்டு ஊதியத்துடன் கூடிய விடுமுறை- கோவா அரசு அறிவிப்பு
    X

    கர்நாடகா தேர்தலை முன்னிட்டு ஊதியத்துடன் கூடிய விடுமுறை- கோவா அரசு அறிவிப்பு

    • கோவா அரசின் இந்த முடிவிற்கு எதிர்கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
    • அண்டை மாநிலங்களில் தேர்தல் நடக்கும் போது விடுமுறை அளிப்பது வழக்கம்.

    அண்டை மாநிலமான கர்நாடகாவில் நாளை சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், கோவாவில் உள்ள கர்நாடகாவை சேர்ந்த வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக, மே 10ம் தேதி (நாளை) அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறையை கோவா அரசு அறிவித்துள்ளது.

    இது தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்களுக்கும் உள்ளடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கோவா அரசின் இந்த முடிவிற்கு எதிர்கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இதுகுறித்து கோவா மாநில தொழில்துறை சங்கத் தலைவர் தாமோதர் கோச்கர், இது மாநில அரசின் அபத்தமான முடிவு என்று கூறினார்.

    மேலும் அவர் கூறுகையில், "கோவாவில் உள்ள தொழில்துறையினர் இது முற்றிலும் அபத்தமான மற்றும் முட்டாள்தனமான முடிவாக கருதுகிறார்கள். மாநில அரசின் இத்தகைய ஒருதலைப்பட்ச முடிவுகளுக்கு எதிராக சட்டப்பூர்வ தீர்வுகளை பரிசீலித்து வருகிறோம்" என்றார்.

    இந்நிலையில், விடுப்பு குறித்து கோவா முதல்வர் அலுவலக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "அண்டை மாநிலங்களில் தேர்தல் நடக்கும் போது விடுமுறை அளிப்பது வழக்கம். கடந்த ஆண்டு கோவாவில் தேர்தல் நடந்த அன்று கர்நாடகாவில் விடுமுறை அறிவிக்கப்பட்டது" என்றார்.

    Next Story
    ×