ஓடி விளையாடிய போது 2 சுவர்களுக்கு இடையில் சிக்கிய சிறுமி: 2 மணி நேரம் போராடி மீட்பு

சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வந்தனர். அவர்கள் சிறுமியை மீட்க முயன்றனர்.போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஓடி விளையாடிய போது 2 சுவர்களுக்கு இடையில் சிக்கிய சிறுமி: 2 மணி நேரம் போராடி மீட்பு
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், தாடி பத்ரி அருகே உள்ள அவுலதிபய பள்ளியை சேர்ந்தவர் கங்க ராஜூ. இவரது மகள் அவந்தி (வயது 7). இவர் அதே ஊரில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த அவந்தி வீட்டின் அருகே ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக 2 சுவர்களுக்கு இடையில் சென்ற அவர் சிக்கிக் கொண்டார். முன்னோக்கியும் பின்னோக்கியும் செல்ல முடியாமல் அவதி அடைந்து கத்தி கூச்சலிட்டார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வந்தனர். அவர்கள் சிறுமியை மீட்க முயன்றனர்.

ஆனால் முடியவில்லை. பதறிப்போன பெற்றோர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அவர்களது முயற்சி தோல்வி அடைந்தது.

இதையடுத்து கியாஸ் கட்டர் மூலம் சுவற்றை இடித்து சிறுமியை மீட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுமி காயம் இல்லாமல் மீட்கப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். தீயணைப்புத் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com