search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராணுவத்தில் இணைந்தாக வேண்டும் என்பது கட்டாயம் இல்லை - மத்திய மந்திரி வி.கே.சிங்
    X

    மத்திய மந்திரி வி.கே.சிங் 

    ராணுவத்தில் இணைந்தாக வேண்டும் என்பது கட்டாயம் இல்லை - மத்திய மந்திரி வி.கே.சிங்

    • அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
    • பேருந்துகள், ரெயில்களை எரிப்பவர்கள் ராணுவத்தில் சேர தகுதி அற்றவர்கள் என வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    ராணுவத்துக்கு ஆள் சேர்க்க அக்னிபத் என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சில இடங்களில் ரெயில் எரிப்பு சம்பவங்களும், வன்முறைகளும் அரங்கேறியுள்ளன.

    அக்னிபத் திட்டத்திற்கு வட மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், அந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில், மத்திய மந்திரியும், ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே.சிங் இந்த விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    ராணுவம் என்பது வேலைவாய்ப்பு அளிக்கும் இடம் அல்ல. அது ஒரு கடையோ அல்லது நிறுவனமோ அல்ல.

    விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே ராணுவத்தில் இணையலாம். உங்களை யாராவது ராணுவத்தில் இணைந்து தான் ஆக வேண்டும் என கட்டாயம் எதுவும் இல்லை.

    அக்னிபத் திட்டத்தின்படி ராணுவத்தில் ஒருவர் 4 ஆண்டுகாலம் பணியாற்றிவிட்டால், அதன்பிறகு அவரது எதிர்காலத்தை பார்த்துக் கொள்ளும் திறன் அவருக்கே வாய்த்துவிடும். அவருக்கு யாருடைய ஆதரவும் தேவை இருக்காது.

    பேருந்துகள், ரெயில்களை எரிப்பவர்கள் இந்த பணியில் சேரத் தகுதி அற்றவர்கள். இவ்வாறு எரித்தால் ராணுவத்தில் வேலை கிடைத்து விடும் என்று யாராவது கூறினார்களா? என கேள்வி எழுப்பினார்.

    Next Story
    ×