search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் திடீர் தீ - யாருக்கும் பாதிப்பில்லை என மந்திரி டுவீட்
    X

    கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் திடீர் தீ - யாருக்கும் பாதிப்பில்லை என மந்திரி டுவீட்

    • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
    • விரைந்து வந்த 8 தீயணைப்பு வண்டிகள் தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவந்தன.

    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று இரவு 9 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தின் 3சி புறப்பாடு முனைய கட்டிடத்தின் செக்-இன் கவுண்டரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வண்டிகள் தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவந்தன. தீ விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

    சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகளில் செக்-இன் பகுதியில் கடுமையான தீ விபத்தின் ஒரு பகுதியைக் காட்டின. விமான நிலைய அதிகாரிகள் முனையத்தில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

    இதுதொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்யா கூறுகையில், டி போர்டல் செக்-இன் கவுண்டரில் தீ விபத்து ஏற்பட்டது. புகை மூட்டத்தால், பயணிகள் மற்றும் ஊழியர்கள் முனைய கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. தீ அணைக்கப்பட்டுள்ளது. இயல்பான செயல்பாடு திரும்பி உள்ளது என தெரிவித்துள்ளார்.

    மேலும், செக்-இன் மற்றும் விமானங்கள் செயல்பாடு இரவு 10.15 மணிக்கு மீண்டும் தொடங்கும் என கொல்கத்தா விமான நிலையம் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தது.

    Next Story
    ×