search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரியானா மாநிலத்தில் மொபைல் இணைய தள சேவை முடக்கம்
    X

    அரியானா மாநிலத்தில் மொபைல் இணைய தள சேவை முடக்கம்

    • டெல்லியில் பேரணி நடத்த அரியானாவில் இருந்து விவசாயிகள் புறப்பட்டுள்ளனர்.
    • அரியானா-பஞ்சாப் எல்லை மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    டெல்லியில் பேரணி நடத்த அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து விவசாயிகள் புறப்பட்ட வண்ணம் உள்ளனர். அரியானாவில் இருந்து விவசாயிகள் டெல்லிக்கு செல்ல முடியாத வகையில் பல்வேறு தடுப்புகளை அம்மாநில அரசு எடுத்துள்ளது.

    நேற்று அரியானா- பஞ்சாப் மாநில எல்லையில் ஏராளமான விவசாயிகள் குவிந்தனர். அவர்கள் தடுப்புகளை அகற்றி முன்னேற முயன்றனர். அப்போது அரியானா போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி விவசாயிகளை விரட்டி அடித்தனர். இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இன்றும் விவசாயிகள் பேரணியில் கலந்து கொள்ள தயாராகி வருகிறார்கள். இதனால் அசாதாரண நிலை உருவாகியுள்ளது. இதனால் அம்பாலா, குருஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசர், ஃபடேஹாபாத், சிர்சா மாவட்டங்களில் மொபைல் இணைய தள சேவைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக எஸ்எம்எஸ் அனுப்பவும் தடைவிதிக்கப்படுகிறது.

    வாய்ஸ் கால் தவிர்த்து அனைத்து நெட்வொர்க் தொடர்பான சேவைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நாளை வரை இந்த தடை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×