எவரெஸ்ட் சிகரத்தில் கூட்டமாக மலையேறும் பயணிகள்

கடந்த 21-ந்தேதி ஒரு குழுவாக மலையேற்றத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் சிறிய மலை முகடு ஒன்றில் ஏறுகின்றனர். 2 பேர் காணாமல் போய் உள்ளனர் என அவர் கூறும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தில் கூட்டமாக மலையேறும் பயணிகள்
Published on

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுவது பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது. கூட்ட நெரிசல் காரணமாக அங்கு விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மலையேற்ற பயிற்சியாளரான விநாயக் மல்லா என்பவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதில், கடந்த 21-ந்தேதி ஒரு குழுவாக மலையேற்றத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் சிறிய மலை முகடு ஒன்றில் ஏறுகின்றனர். அந்த முகடு அனைவரின் எடையையும் தாங்க முடியாமல் சரிந்து விழுகிறது. இதில் 2 பேர் காணாமல் போய் உள்ளனர் என அவர் கூறும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதே போல இந்தியாவை சேர்ந்த ராஜன் டிவிடேடி என்பவரும் எவரெஸ்ட் சிகரத்தில் மக்கள் கூட்டம், கூட்டமாக மலையேறும் காட்சிகளை பகிர்ந்துள்ளார். அதில், 'எவரெஸ்ட் சிகரம் ஒரு ஜோக்கர் அல்ல', மக்கள் கூட்டம், கூட்டமாக மலையேறி வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com