பார்ட்டியில் பாஸுடன் உடலுறவு கொள்ள மனைவியை வற்புறுத்திய கணவன்.. மறுத்ததால் முத்தலாக்

மனைவியை பார்ட்டிக்கு அழைத்துச்சென்று தனது முதலாளியுடன் உறவுகொள்ள வற்புறுத்தியுள்ளார்.கணவன் மீது முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது
பார்ட்டியில் பாஸுடன் உடலுறவு கொள்ள மனைவியை வற்புறுத்திய கணவன்.. மறுத்ததால் முத்தலாக்
Published on

மகாராஷ்டிர மாநிலம் கல்யான் நகரில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் தனது முதலாளியுடன் உறவு வைத்துக்கொள்ள மறுத்த  தனது மனைவிக்கு முத்தலாக் கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 டிசம்பர் 19 அன்று 45 வயதான அந்த நபர் தனது 28 வயதுடைய 2வது மனைவியை அலுவலகத்தில் பார்ட்டிக்கு அழைத்துச்சென்று தனியறையில்  தனது முதலாளியுடன் உறவுகொள்ள வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு மனைவி மறுக்கவே, பெற்றோரிடமிருந்து ரூ.15 லட்சம் வாங்கித் தருமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவர் மறுக்கவே தனது 2வது மனைவிக்கு அவர் உடனே முத்தலாக் கூறி வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளார். முதல் மனைவியை விவாகரத்து செய்ய பணம் கேட்டு அந்த நபர் 2வது மனைவியை உடல் ரீதியாகவும் சித்ரவதை செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சம்பாஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து முத்தலாக் கூறிய கணவன் மீது முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டம், 2019 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com