மேற்கு வங்கம் , பீகாரின் முன்னாள் ஆளுநர் டி. ஒய். பாட்டீல் காலமானார்

டி.ஒய். பாட்டீல் குழுமத்தின் நிறுவனராகப் பரவலாக அறியப்பட்டார்.
D Y Patil
Published on

கல்வியாளரும் முன்னாள் ஆளுநருமான டி.ஒய். பாட்டீல், மகாராஷ்டிரா மாநிலத்தின் கோலாப்பூரில் தனது 90வது வயதில் காலமானார்.

பாட்டீல் 2009 முதல் 2013 வரை திரிபுராவின் ஆளுநராகவும், 2013 முதல் 2014 வரை பீகாரின் ஆளுநராகவும் பணியாற்றினார், மேலும் 2014-இல் சிறிது காலம் மேற்கு வங்க ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.

1991-இல் பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், மும்பை, நவி மும்பை, புனே மற்றும் கோலாப்பூர் ஆகிய இடங்களில் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உட்பட 150-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் டி.ஒய். பாட்டீல் குழுமத்தின் நிறுவனராகப் பரவலாக அறியப்பட்டார்.

அரசியலில் பாட்டீல்:

1935 அக்டோபர் 22-ஆம் தேதியன்று கோலாப்பூரில் பிறந்த பாட்டீல், மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கி, பின்னர் கல்வி மற்றும் அறப்பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடையவராக இருந்த அவர், பின்னர் 2018-ல் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இரங்கல்:

காங்கிரஸ் தலைவர் டாக்டர் நிதின் ராவத் எகஸ் தள பதிவில், கல்வித்துறை "ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட சிற்பியை" இழந்துவிட்டது என்றும், பாட்டீலின் மரணம் "கல்வி, சமூக சேவை மற்றும் பொது வாழ்க்கைக்கு ஒரு பெரும் இழப்பு" என்றும், அவரது பணிகள் "பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்" என்றும் குறிப்பிட்டார்.

திரிபுரா முதலமைச்சர் மாணிக் சாஹாவும் பாட்டிலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவரை "ஒரு தலைசிறந்த கல்வியாளர், திரிபுரா மற்றும் பீகாரின் முன்னாள் ஆளுநர்" என்றும், "ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட நிறுவனங்களை உருவாக்கியவர், கொடையாளர் மற்றும் மதிக்கப்படும் பொது ஆளுமை" என்றும், "கல்வி, சுகாதாரம் மற்றும் பொதுச் சேவைக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகளின் மூலம் ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டு

X

Maalai Malar
www.maalaimalar.com