

நீட் வினாத்தாள் லீக் விவகாரத்தில் பொறுப்பேற்று, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. பின்னர் இது மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டமாக மாறியது.
கடந்த 20-ந்தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் பேரணியை நடத்தினர். அப்போது போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக்குண்டுகள் வீசினர். இதில் பலர் காயம் அடைந்தனர். இதனால் நாடு முழுவதும் மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று மத்திய அமைச்சரான தர்மேந்திர பிரதான், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் இருந்து வந்த மூத்த அரசியல்வாதிகள் ஒருவர் தர்மேந்திர பிரதான். இவர் கல்லூரி காலத்தில் ஏபிவிபி-யில் செயல்பாட்டராக முதன்முதலில் தன்னை இணைத்துக் கொண்டார். 1998-ல் பாஜக-வின் இணைந்தார்.
1993-ல் ABVP மாநில செயலாளராகவும், 1995-ல் தேசிய பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார். முதன்முதலில் 2000-த்தில் அதிகாரப்பூர்வமாக அரசியலில் நுழைந்தார். ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். 2000 முதல் 2004-ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.-வாக இருந்துள்ளார். இந்த சமயத்தில் பாஜக-வின் இளைஞர் அணி (2001) தலைவராகவும், 2002-ல் தேசிய செயலாளராகவும் இருந்துள்ளார்.
2004-ம் ஆண்டு நடைபெற்ற 14-வது மக்களவை தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக எம்.பி. ஆனார். இதே வருடத்தில் பாஜக யுவ மோர்ச்சா {(Bharatiya Janata Yuva Morcha (BJYM)} தேசிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
பாராளுமன்றத்தில் பலவேறு கமிட்டி மற்றும் நாடாளுமன்ற அமைப்புகளில் பணியாற்றியுள்ளார்.
2004-ல் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவர் மனுக்கள் மீதான குழு மற்றும் எரிசக்தி துறைக்கான குழு ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார்.
ஆகஸ்ட் 2007 முதல் எனர்ஜி துறைக்கான நிலைக்குழுவின் உறுப்பினராகப் பணியாற்றினார்.
2012 மற்றும் 2014-க்கு இடைப்பட்ட காலத்தில் அரசு உறுதிமொழிகள் குழுவின் உறுப்பினராக இருந்தார்.
மே 2012 முதல் அக்டோபர் 2013 வரை, தொலைத்தொடர்பு உரிமங்கள் மற்றும் அலைக்கற்றை (spectrum) ஒதுக்கீடு மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான விவகாரங்களை ஆய்வு செய்த கூட்டு நாடாளுமன்றக் குழுவிலும் பணியாற்றினார்.
அவர் ஏப்ரல் 2012 முதல் 2018 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். மேலும் ஜூன் 2024-ல் 18-வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரதான் பல ஆண்டுகளாக மத்திய அரசில் பல்வேறு முக்கியத் துறைகளைக் கையாண்டு வந்துள்ளார்.
செப்டம்பர் 2017-ல், அவர் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சராகவும், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
மே 2019 முதல் ஜூலை 2021 வரை, அவர் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சராகவும், எஃகு துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
ஜூலை 7, 2021 அன்று கல்வித்துறை அமைச்சராகவும், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றது அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது.
ஜூன் 2024-ல் 18-வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜூன் 9, 2024 அன்று அவர் மத்தியக் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
ஒடிசா சட்டமன்றத்தின் சிறந்த சட்டமன்ற உறுப்பினருக்கான விருதான 'உத்கல்மணி கோபபந்து பிரதிபா சம்மான்' விருதும் பிரதானுக்கு வழங்கப்பட்டது.