search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விமானிகள் இல்லாததால் விஸ்டாரா விமான சேவை ரத்து: தினசரி ரிப்போர்ட் கேட்கும் டிஜிசிஏ
    X

    விமானிகள் இல்லாததால் விஸ்டாரா விமான சேவை ரத்து: தினசரி ரிப்போர்ட் கேட்கும் டிஜிசிஏ

    • நேற்று 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 160 விமான சேவைகளில் காலதாமதம் ஏற்பட்டன.
    • இன்று மும்பை, டெல்லி, பெங்களூருவில் இருந்து புறப்பட்ட வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    இந்திய விமான நிறுவனங்களில் ஒன்று விஸ்டாரா. இந்த நிறுவனம் விமானிகள் மற்றும் பணிப் பெண்கள் இல்லாத காரணத்தால் விமானங்களை ரத்து செய்து வருகிறது. பல விமானங்களின் புறப்பாடு மற்றும் வந்து சேர்தலில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று ஏராளமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் அசௌகரியத்திற்கு உள்ளாகினர். தினந்தோறும் இவ்வாறு ஏற்பட்டால் நிலைமை மோசமாகும் என்பதால் டிஜிசிஏ (விமானப் போக்குவரத்து இயக்குநரகம்) தினசரி ரிப்போர்ட் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதன்மூலம் பயணிகளின் அசௌகரியத்தை குறைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

    விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் இல்லாமல் நேற்று மட்டும் விஸ்டாரா 50 விமானங்களை ரத்து செய்துள்ளது. பல விமானங்களின் புறப்பாடு மற்றும் வந்து சேர்வதில் காலதாமதம் ஏற்பட்டது.

    ஏர்இந்தியா நிறுவனத்துடன் இணைப்பது குறித்து விஸ்டாரா செயல்பட்டு வரும் நிலையில், விமானிகள் பிரச்சனை தொடர்பாக தற்காலிகமாக விமானங்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.

    இன்று மட்டும் மும்பையில் இருந்து புறப்பட வேண்டிய 15 விமானங்கள், டெல்லியில் இருந்து புறப்பட்ட வேண்டிய 12 விமானங்கள், பெங்களூருவில் இருந்து புறப்படட வேண்டிய 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    Next Story
    ×