search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் பீதி
    X

    திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் பீதி

    • நேற்று இரவு திருப்பதி மலை பாதையில் சிறுத்தை ஒன்று நடமாடியது.
    • தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருப்பதி:

    திருப்பதி மலைப்பாதை அருகே சிறுத்தைகள் நடமாடி வருகின்றன. கடந்த மாதம் 3 வயது சிறுவனை சிறுத்தை கவ்வி தூக்கி சென்றது.

    அங்கிருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் விரட்டிச் சென்றதால் சிறுவனை விட்டு சென்றது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து மலை பாதையில் இரவு நேரங்களில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    மேலும் விலங்குகள் நடமாடக்கூடிய பகுதிகளில் ஆயுதம் எழுதிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .

    இந்நிலையில் நேற்று இரவு திருப்பதி மலை பாதையில் சிறுத்தை ஒன்று நடமாடியது.

    இதை கண்ட பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் சிறுத்தை நடமாடிய பகுதியில் வலைகளைக் கொண்டு வேலி அமைத்தனர். இதன் மூலம் இந்த பகுதியில் சிறுத்தை நடைபாதைக்கு வராமல் தடுக்க முடியும் என தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×