search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரூ.2 ஆயிரம் நோட்டுக்கு சலுகை அறிவித்த டெல்லி வியாபாரி
    X

    ரூ.2 ஆயிரம் நோட்டுக்கு சலுகை அறிவித்த டெல்லி வியாபாரி

    • டெல்லியில் ஒரு இறைச்சிக்கடை வியாபாரி தனது கடை முன்பு வைத்துள்ள ஒரு அறிவிப்பு டுவிட்டரில் பரவி வருகிறது.
    • ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொடுங்கள், சுத்தமான இறைச்சிக் கடையான சர்தாரில் இருந்து ரூ.2,100-க்கு இறைச்சியை பெற்று செல்லுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வருகிற செப்டம்பர் 30-ந் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை பற்றி ஏராளமான மீம்ஸ்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில் டெல்லியில் ஒரு இறைச்சிக்கடை வியாபாரி தனது கடை முன்பு வைத்துள்ள ஒரு அறிவிப்பு டுவிட்டரில் பரவி வருகிறது. அதில், எங்களிடம் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை கொடுங்கள், சுத்தமான இறைச்சிக் கடையான சர்தாரில் இருந்து ரூ.2,100-க்கு இறைச்சியை பெற்று செல்லுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதைப்பார்த்த நெட்டிசன்கள், கடையில் விற்பனையை அதிகரிக்க இது புதுமையான வழியாக இருப்பதாக கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×