search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நியமனத்திற்கு எதிரான பொதுநல வழக்கு தள்ளுபடி
    X

    தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்  பதவியேற்பு

    தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நியமனத்திற்கு எதிரான பொதுநல வழக்கு தள்ளுபடி

    • சஞ்சீவ் குமார் திவாரி என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்
    • இது விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு என்று நீதிபதிகள் கூறினர்

    புதுடெல்லி:

    உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் கடந்த 9ம் தேதி பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமானம் செய்துவைத்தார்.

    தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சஞ்சீவ் குமார் திவாரி என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்தார். டி.ஒய்.சந்திரசூடிட நியமனம் அரசியலமைப்புக்கு எதிரானது என அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர். இது விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு என்று கூறிய நீதிபதிகள், வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

    இதே கோரிக்கையுடன் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×