கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான மனு- தீர்ப்பு ஒத்திவைத்து டெல்லி ஐகோர்ட் உத்தரவு

மக்களவை தேர்தல் நடைபெறும்போது சம வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.தேர்தலை காரணம் காட்டி யாரும் தப்பிக்க முடியாது.
கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான மனு- தீர்ப்பு ஒத்திவைத்து டெல்லி ஐகோர்ட் உத்தரவு
Published on

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தனது கைதுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, "முதல்வரின் கைது மக்களவை தேர்தல் நடைபெறும்போது சம வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படை கோட்பாடுக்கு எதிரானது. அமலாக்கத் துறையின் நடவடிக்கை நியாயம் அல்ல" என குறிப்பிட்டார்.

அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் "டெல்லி முதல்வர் கைதில் எவ்வித சட்ட விரோதமும் இல்லை. போதுமான ஆதாரங்கள் இருந்ததன் அடிப்படையிலேயே அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

அரசியலில் இருப்பவர் தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு கொலை செய்தால் அவரை கைது செய்யாமல் இருக்க முடியுமா? முறைகேட்டில் கெஜ்ரிவாலின் தொடர்பை விசாரணையின் முடிவில்தான் தெரிந்துகொள்ள முடியும்.

தேர்தலை காரணம் காட்டி யாரும் தப்பிக்க முடியாது" என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா ஷர்மா, மனு மீதான தீர்ப்பை மறுதேதி குறிப்பிடால் ஓத்திவைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com