search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜாமினை நீட்டிக்கக்கோரும் கெஜ்ரிவாலின் மனு- அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு
    X

    ஜாமினை நீட்டிக்கக்கோரும் கெஜ்ரிவாலின் மனு- அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

    • ஜூன் 2ம் தேதி திகார் சிறையில் சரணடைய கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
    • அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் கோரியும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு.

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமின் ஜூன் 1ம் தேதியுடன் நிறைவடைகிறது.

    ஜூன் 2ம் தேதி திகார் சிறையில் சரணடைய கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரியும், அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் கோரியும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு இன்று பிற்பகல் 2 மணியளவில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முன் விசாரணைக்கு வந்தது.

    இதில், கெஜ்ரிவாலின் மனுக்களுக்கு பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    விசரணையின்போது, கெஜ்ரிவால் தற்போது நீதிமன்ற காவலில் இல்லை, அவருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், "பஞ்சாப்பில் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். அவரது உடல் நலம் பரப்புரைக்கு தடையாக இல்லை.

    அமலாக்கத்துறை பதில் அளிக்காத வகையில் ஜாமின் கோரி இறுதி நேரத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்" என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×