search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பது ஏன்? - பிரதமருக்கு கடிதம் மூலம் விளக்கிய கெஜ்ரிவால்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பது ஏன்? - பிரதமருக்கு கடிதம் மூலம் விளக்கிய கெஜ்ரிவால்

    • டெல்லியில் நாளை நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது.
    • இதில் அனைத்து மாநில முதல் மந்திரிகள் பங்கேற்கிறார்கள்.

    புதுடெல்லி:

    மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக் என்ற அமைப்பினை மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு கொண்டு வந்துள்ளது. இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். துணைத்தலைவராக சுமன் பெரி இருக்கிறார். இதன் ஆட்சிமன்ற குழுவில் அனைத்து மாநிலங்களின் முதல் மந்திரிகளும், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்களும் இடம் பெற்றுள்ளனர்.

    இதன் ஆட்சிமன்ற குழு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு, இது பிரதமர் மோடி தலைமையில் ஆகஸ்டு மாதம் 7-ம் தேதி நடைபெற்றது.

    இதற்கிடையே, இந்த ஆண்டு நிதி ஆயோக் ஆட்சிமன்ற குழு கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் முதல் மந்திரிகளும் கலந்து கொள்கிறார்கள். மாநிலங்கள் தங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், கூட்டுறவு கூட்டாட்சி என்பது கேலிக்கூத்தாக இருக்கையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில் என்ன பயன் என டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், பிரதமர் சுப்ரீம் கோர்ட்டுக்கு கீழ்ப்படியவில்லை என்றால் மக்கள் நீதிக்கு எங்கே போவார்கள் என கேள்வி எழுப்புகின்றனர்.

    கூட்டுறவு கூட்டாட்சி என்பது கேலிக்கூத்தாக இருக்கும்போது நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் என்ன பயன் என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×