search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி மாநகராட்சி தேர்தலில் தோல்வி - தலைவர் பதவியிலிருந்து விலகினார் ஆதேஷ் குப்தா
    X

    ஆதேஷ் குப்தா

    டெல்லி மாநகராட்சி தேர்தலில் தோல்வி - தலைவர் பதவியிலிருந்து விலகினார் ஆதேஷ் குப்தா

    • டெல்லி மாநகராட்சி தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து ஆதேஷ் குப்தா பதவி விலகினார்.
    • கடந்த 15 ஆண்டுகளாக பா.ஜ.க. வசம் இருந்த டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ளது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் ஒருங்கிணைந்த மாநகராட்சியின் 250 இடங்களுக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றிருக்கிறது. இந்தக் கட்சிக்கு 134 இடங்கள் கிடைத்துள்ளது. பா.ஜ.க.வுக்கு 104 இடங்கள் மட்டுமே கிடைத்தது. டெல்லி மாநகராட்சி முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி வசம் சென்றுள்ளது.

    இந்நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து டெல்லி பா.ஜ.க. தலைவர் ஆதேஷ் குப்தா இன்று பதவி விலகினார். ஆதேஷ் குப்தாவின் ராஜினாமாவிற்கு ஒப்புதல் பா.ஜ.க. தலைமை அளித்துள்ளது.

    மேலும் துணை தலைவராக இருந்த வீரேந்திர சச்தேவா இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்

    கடந்த 15 ஆண்டுகளாக பா.ஜ.க. வசம் இருந்த டெல்லி மாநகராட்சியை தற்போது ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ளது.

    Next Story
    ×