இந்திரா தான் இந்தியா என்று நம்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் - காங்கிரஸ் கட்சிக்கு மத்திய மந்திரி அறிவுரை

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
முக்தார் அப்பாஸ் நக்வி
முக்தார் அப்பாஸ் நக்வி
Published on

புதுடெல்லி 


பாராளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி,  மோடி அரசின் கொள்கைகள் இரண்டு இந்தியாவை உருவாக்க வழிவகுத்துள்ளன என்று குற்றம் சாட்டியிருந்தார். மிக பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே வளர்ந்து வரும் இடைவெளி உட்பட நாட்டின் முக்கிய சவால்களை மத்திய அரசால் எதிர் கொள்ள முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், மக்களவையில் குடியரசுத் தலைவருக்கு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளதாவது:

இந்திராதான் இந்தியா, இந்தியாவே இந்திரா, காங்கிரஸே நாடு, நாடுதான் காங்கிரஸ் என்ற எண்ணத்தில் இருந்து நாம் விடுபட வேண்டும். கலவரங்கள் மற்றும் பயங்கரவாத குண்டு வெடிப்புகளின் வாரம் முடிவுக்கு வந்துவிட்டது. 

முத்தலாக் மீதான உச்சநீதிமன்ற முடிவை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தது. முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு வெட்டுகள், கமிஷன்கள், குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டு வந்தது. ஜம்மு காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. 

அண்டை நாட்டின் பயங்கரவாத ஆத்திர மூட்டல் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா தனது  சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் பதிலடி கொடுத்தது. தேவையில்லாத 1500 சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com