search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்- பாலியல் பலாத்காரம் செய்த உறவினர் போக்சோவில் கைது
    X

    கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்- பாலியல் பலாத்காரம் செய்த உறவினர் போக்சோவில் கைது

    • ரிபா கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • ரிபாவின் தற்கொலைக்கான கடிதம் சிக்கியது. இதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலம் கொயிலாண்டி பகுதியை சேர்ந்தவர் ரிபா. இவர் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் ரிபா கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக கொயிலாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ரிபாவின் தற்கொலைக்கான கடிதம் சிக்கியது. இதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கடிதத்தில், காப்பாட்டை சேர்ந்த அவரது தாத்தா அபுபக்கர் பாலியல் பலாத்காரம் செய்ததால் மனவேதனையடைந்து தற்கொலை செய்வதாகவும் குறிப்பிட்டு உள்ளார். இதையடுத்து அபுபக்கரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×