கேரளா அருகே பழுதடைந்த கப்பலில் சிக்கித் தவித்த ஊழியர்கள் மீட்பு - கடலோர காவல்படை நடவடிக்கை

லட்சத்தீவுக்குச் செல்லும் வழியில் சரக்கு கப்பலின் உள்ளே கடல் நீர் புகுந்ததால் என்ஜின் பழுதடைந்தது.
கடலோர காவல்படை கப்பல்
கடலோர காவல்படை கப்பல்
Published on

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பேப்பூரில் இருந்து 18 கடல் மைல் தொலைவில் எம்.எஸ்.வி.பிலால் என்ற சரக்கு கப்பல் பழுதடைந்துள்ளதாகவும் அதில் 8 பணியாளர்கள் சிக்கியுள்ளதாகவும் கடலோரக் காவல்படை தகவல் வந்தது.

இதனையடுத்து விக்ரம் என்ற மீட்பு கப்பல் மூலம் அந்த பகுதிக்கு சென்ற கடலோரக் காவல்படையினர் பிலால் கப்பலில் இருந்த 8 பணியாளர்களை பத்திரமாக மீட்டனர். 

லட்சத்தீவுக்குச் செல்லும் வழியில் அந்த கப்பலுக்குள் கடல்நீர் புகுந்ததால் எஞ்ஜின் பழுதடைந்ததாகவும், இதையடுத்து அந்த கப்பல் இன்டர்செப்டர் படகுடன் இணைக்கப்பட்டு திரும்ப எடுத்துச் செல்லப்பட்டதாக கடலோர காவல்படையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேயிலைத் தோட்டத்தில் நடந்த கொடூரம்... சிறுவனை கொன்ற நபர் உயிரோடு எரித்துக் கொலை

X

Maalai Malar
www.maalaimalar.com