ஸ்வீட் கடைகளில் ஆய்வு நடத்த மத்திய உணவு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவு

ஆயுத பூஜையின்போது இனிப்புகளின் தேவை அதிகரிக்கும். இனிப்பு விற்பனை கடைகள், பேக்கரிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
ஸ்வீட் கடைகளில் ஆய்வு நடத்த மத்திய உணவு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவு
Published on

இந்துக்களின் முக்கியமான விழாவான நவராத்திரி, ஆயுத பூஜை, விஜயதசமி அடுத்த மாதம் வர இருக்கிறது. அதைத்தொடர்ந்து தீபாவளி பண்டிகையும் வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள இந்துக்களால் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளியாகும். இந்த விசேஷ நாட்களில் இனிப்புகளுக்கு முக்கிய இடம் உண்டு.

ஆயுத பூஜை விழாவின்போது இனிப்புகளின் தேவை அதிகரிக்கும்.

இந்நிலையில் பண்டிகை காலங்களில் இனிப்புகளின் தரம் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என மத்திய உணவு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதில்,

* இனிப்பு விற்பனை கடை, பேக்கரிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும்.

* தேவை அதிகரிப்பதால் இனிப்புகளின் தரத்தை குறைக்க வாய்ப்புள்ளது.

* இனிப்பு விற்பனை கடைகள், பேக்கரிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com