தமிழகத்திற்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

மார்ச் முதல் மே மாதம் வரை மூன்று மாதங்களுக்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட உத்தரவு.மார்ச் முதல் மே மாதம் வரை மாதம் ஒன்றிற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட உத்தரவு.
தமிழகத்திற்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு
Published on

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 38-ஆவது கூட்டம் இன்று நடைபெற்றது. காவிரி ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா மாநில அரசின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் நீர் இருப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கர்நாடகா காவிரியில் இருந்து தர வேண்டிய நீர் விவகாரம், நீர்த்திறப்பு தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

பின்னர், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மார்ச் முதல் மே மாதம் வரை மூன்று மாதங்களுக்கு, மாதம் ஒன்றிற்கு 2.5 டி.எம்.சி. என்ற வகையில் 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com