பிரபல கார்ட்டூனிஸ்ட் சுகுமார் காலமானார்: பினராயி விஜயன் இரங்கல்

கேரள சாகித்ய அகாடமி விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ள இவர், காவல்துறையில் 30 ஆண்டுகள் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.நையாண்டி மற்றும் கார்ட்டூன் துறையில் முத்திரை பதித்தவர் சுகுமார் என்று பினராயி விஜயன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல கார்ட்டூனிஸ்ட் சுகுமார் காலமானார்: பினராயி விஜயன் இரங்கல்
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில பிரபல கார்ட்டூனிஸ்ட் மற்றும் நையாண்டி கலைஞராக திகழ்ந்தவர் சுகுமாரன் பொட்டி. இவர் நேற்று காலமானார். அவருக்கு வயது 91. கடந்த 1996-ம் ஆண்டு, வாயில் வண்ணத்து கொத்தக்கு பாட்டு என்ற படைப்புக்காக கேரள சாகித்ய அகாடமி விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ள இவர், காவல்துறையில் 30 ஆண்டுகள் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.

உடல் நலக்குறைவு காரணமாக சுகுமார், காலமான நிலையில், அவரது மறைவுக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன், எதிர்க்கட்சி தலைவர் சதீசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நையாண்டி மற்றும் கார்ட்டூன் துறையில் முத்திரை பதித்தவர் சுகுமார் என்று பினராயி விஜயன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com