search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அவர்கள் குற்றவாளிகள் அல்ல.. விவசாயிகள் போராட்டத்திற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் மகள் ஆதரவு
    X

    அவர்கள் குற்றவாளிகள் அல்ல.. விவசாயிகள் போராட்டத்திற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் மகள் ஆதரவு

    • மதுரா சுவாமிநாதன் காணொலி வாயிலாக கலந்து கொண்டார்.
    • பஞ்சாப் விவசாயிகள் இன்று டெல்லியை நோக்கி பேரணி செல்கின்றனர்.

    வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பிப்ரவரி 13-ம் தேதி முதல் விவசாயிகள் முற்றுகை போட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மகளான மதுரா சுவாமிநாதன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    அண்மையில் மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நேற்று (பிப்.14) கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் எம்.எஸ். சுவாமிநாதனின் மகளும் பொருளாதார நிபுணருமான மதுரா சுவாமிநாதன் காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்.


    அப்போது பேசிய அவர், "பஞ்சாப் விவசாயிகள் இன்று டெல்லியை நோக்கி பேரணி செல்கின்றனர். ஹரியானாவில் அவர்களுக்காக சிறைச்சாலை தயாராகி வருவதாகவும், அவர்களை தடுக்க தடுப்பு வேலிகள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் செய்தித்தாள்களின் மூலம் தெரிந்து கொண்டேன்."

    "நமக்கு உணவு கொடுக்கும் விவசாயிகளிடம் நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்கள் விவசாயிகள், குற்றவாளிகள் அல்ல. விவசாயிகளை குற்றவாளிகளை போல நடத்தக் கூடாது. இந்தியாவின் முன்னணி விஞ்ஞானிகளான உங்கள் அனைவரிடமும் நான் கேட்டுக் கொள்வது இதைத்தான். இந்த பிரச்சினைக்கு நாம் தீர்வு காணவேண்டும். இதுதான் என்னுடைய வேண்டுகோள்," என்று தெரிவித்தார்.

    Next Story
    ×