விமானத்தில் குடிபோதையில் ரகளை- தொழில் அதிபர் கைது

சென்னையில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. மும்பையில் விமானம் தரை இறங்கியபோது தொழில் அதிபர் தர்ஷன் பரேக்கை போலீசார் கைது செய்தனர்.
விமானத்தில் குடிபோதையில் ரகளை- தொழில் அதிபர் கைது
Published on

மும்பை:

சென்னையில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. அதில் மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் தர்ஷன் பரேக் பயணம் செய்தார். அவர் விமானத்தில் ஏறியதும் ரகளையில் ஈடுபட்டார்.

குடிபோதையில் இருந்த அவர் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மற்ற பயணிகள் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மும்பையில் விமானம் தரை இறங்கியபோது தொழில் அதிபர் தர்ஷன் பரேக்கை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com