search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் டிரோன் - சுட்டு வீழ்த்தியது எல்லைப் பாதுகாப்பு படை
    X

    சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன்

    அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் டிரோன் - சுட்டு வீழ்த்தியது எல்லைப் பாதுகாப்பு படை

    • பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் இன்றிரவு டிரோன் ஒன்று அத்துமீறி நுழைந்தது.
    • அந்த ஆளில்லா விமானத்தை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

    அமிர்தசரஸ்:

    பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் பஞ்சாப்பில் உள்ள குர்தாஸ்பூர் பிரிவு எல்லைக்குள் வெள்ளிக்கிழமையன்று ஆளில்லா விமானம் ஒன்று அத்துமீறி நுழைந்தது. இதைக்கண்ட ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த எல்லை பாதுகாப்புப் படையினர் அதனை சுட்டு வீழ்த்தினர்.

    இந்நிலையில், இன்றிரவு 9.15 மணியளவில் பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ் பிரிவு எல்லைக்குள் ராணியா பகுதியில் ஆக்டா-காப்டர் என்ற அத்துமீறி புகுந்த ஆளில்லா விமானம் ஒன்றை பி.எஸ்.எப். வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இது 12 கிலோ எடை கொண்டது.

    துப்பாக்கிச் சூட்டில் எட்டு இறக்கைகளில் 2 இறக்கைகள் சேதமடைந்தன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    கடந்த இரண்டு நாட்களில் சுட்டு வீழ்த்தப்பட்ட 2-வது ஆளில்லா விமானம் இது என பி.எஸ்.எப். தெரிவித்துள்ளது.

    Next Story
    ×