சாலையே இல்லாத வயல் வெளியில் பாலம் கட்டிய பீகார் அரசு

வயலின் நடுவே கட்டப்பட்டுள்ள பாலத்தை கட்டு கிராம மக்கள் குழப்பமடைந்தனர். தனியார் நிலம் என்பதால் சாலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
bihar Bridge
Published on

பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் சாலையே இல்லாத இடமான வயல் வெளியில் பாலம் கட்டப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.3 கோடி செலவில் பாலம் மற்றும் சாலை அமைக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் தனியார் நிலம் என்பதால் சாலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

அதே சமயம் அங்கு சாலை அமைக்கப்பட்ட பிறகு, வயலின் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறம் தண்ணீர் செல்ல பாதை வேண்டும் என்பதால் சாலை அமைக்கும் முன்பே பாலம் காட்டியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது எதுவும் தெரியாத கிராம மக்கள் வயலின் நடுவே கட்டப்பட்டுள்ள பாலத்தை கட்டு குழப்பமடைந்தனர். 

அண்மையில் பீகார் மாநிலத்தில் 10க்கும் மேற்பட்ட பாலங்கள் இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com