search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    22-ந்தேதி கர்நாடக மாநில கோவில்களில் சிறப்பு பூஜை: பா.ஜனதா வரவேற்பு
    X

    22-ந்தேதி கர்நாடக மாநில கோவில்களில் சிறப்பு பூஜை: பா.ஜனதா வரவேற்பு

    • அயோத்தி ராம் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது.
    • அன்றைய தினம் கர்நாடக மாநில கோவில்களில் சிறப்புபூஜைக்கு ஏற்பாடு செய்ய சுற்றறிக்கை அனுப்பப்படும் என மந்திரி அறிவிப்பு.

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. வருகிற 22-ந்தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதனையொட்டி வருகிற 22-ந்தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்படும் என தெலுங்கானா மாநில மந்திரி ராமலிங்கா ரெட்டி அறிவித்திருந்தார்.

    இதுகுறித்து பா.ஜனதா தலைவர் சி.டி. ரவி கூறுகையில் "இந்த முடிவு சிறந்தது. நாங்கள் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். அவர்கள் சிறந்த முடிவை எடுத்துள்ளனர். பல ஆண்டுகள் கழித்து காங்கிரஸ்க்கு ஞானம் உதித்துள்ளது. கடவுள் ராமர் எல்லோருக்கும் சொந்தமானவர். காங்கிரஸ் ராமரை விட்டுவிட்டது. தற்போது அவரை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். இது நல்லது, நாட்டிற்குள் நல்லது" என்றார்.

    Next Story
    ×