search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
    X

    ராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

    • ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை (ஜனவரி 22) நடைபெறுகிறது.
    • தான் தாவூத் இப்ராகிம்-க்கு நெருக்கமானவர் என்று கூறினார்.

    பீகார் மாநிலத்தின் அராரியா மாவட்டத்தை சேர்ந்த 21 வயது நபர் ராமர் கோவிலை குண்டு வைத்து தகர்ப்பதாக எச்சரிக்கை விடுத்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஜனவரி 22-ம் தேதி அயோத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட இருக்கும் ராமர் கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்பேன் என இன்டெகாப் அலாம் என்ற நபர் மிரட்டல் விடுத்தார் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    "ஜனவரி 19-ம் தேதி இந்த நபர், பொது மக்கள் அவசர உதவி கோர பயன்படுத்தும் 112 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தனது பெயரை சோட்டா ஷகீல் என்றும், தான் தாவூத் இப்ராகிம்-க்கு நெருக்கமானவர் என்றும் கூறினார்."

    "தொடர்ந்து பேசிய அவர், ஜனவரி 22-ம் தேதி அயோத்தி ராமர் கோவிலை வெடிக்க செய்வேன் என மிரட்டினார். இவர் எவ்வித குற்ற பின்னணியும் கொண்டிருக்கவில்லை, ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டவராக தெரிகிறார்," என அராரியா காவல் துறை கண்காணிப்பாளர் அசோக் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×