எல்லை மீறி போறாங்களே.. மழைநீரில் வலைவிரித்து மீன்பிடித்துச் சென்ற மக்கள் - வீடியோ

நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெளியேறாமல், தேங்கியுள்ளது. வெள்ள நீரில் மக்கள் மீன்பிடித்து சென்ற சம்பவம் அரங்கேறியது.
எல்லை மீறி போறாங்களே.. மழைநீரில் வலைவிரித்து மீன்பிடித்துச் சென்ற மக்கள் - வீடியோ
Published on

பெங்களூருவில் இன்று (அக்டோபர் 22) கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெளியேறாமல், தேங்கியுள்ளது.

மழைநீர் தேங்கியதை அடுத்து பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்புப்படையினர் படகுகள் மூலம் மீட்டனர். தொடர் கனமழையில் சிக்கித் தவிக்கும் பெங்களூரு நகரின் சில பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனமழையால் சூழ்ந்த வெள்ள நீரில் மக்கள் மீன்பிடித்து சென்ற சம்பவம் அரங்கேறியது. பெங்களூருவை அடுத்த அல்லலசண்ட்ரா மற்றும் எலஹங்கா பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரில் மக்கள் மீன்களை பிடித்து சென்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com