search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நாய் இறைச்சிக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்திய வாலிபர்
    X

    நாய் இறைச்சிக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்திய வாலிபர்

    • நாய் இறைச்சியை சட்டப்பூர்வமாக்க எனது மனுவில் கையெழுத்திடுங்கள் என்று எழுதப்பட்ட பலகைக்கு அருகில் வாலிபர் நிற்கிறார்.
    • புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், செல்லப் பிராணிகள் வளர்ப்போர் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    பெங்களூருவை சேர்ந்த வாலிபர் ஒருவர் நாய் இறைச்சியை சட்டப்பூர்வமாக்க கோரி நடத்திய கையெழுத்து இயக்கம் தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    அதில் வாலிபர், நாய் இறைச்சியை சட்டப்பூர்வமாக்க எனது மனுவில் கையெழுத்திடுங்கள் என்று எழுதப்பட்ட பலகைக்கு அருகில் நிற்கிறார். இந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், செல்லப் பிராணிகள் வளர்ப்போர் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    அதில் ஒருவர், இந்த நபர் விளம்பரத்திற்காகவும், பிறரின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் இது போன்று செய்வதாக பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×