கர்நாடகத்தில் 'பீர்' விலை உயருகிறது: வருகிற 20-ந்தேதி முதல் அமல்

ரூ.10 முதல் ரூ.40 வரை பீர் விலை அதிகரிக்கப்பட உள்ளது. பீர் விலையை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், பீர் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடகத்தில் 'பீர்' விலை உயருகிறது: வருகிற 20-ந்தேதி முதல் அமல்
Published on

பெங்களூரு:

கர்நாடகத்தில் எப்போதும் மதுபானங்களின் மீதான கலால் வரி கர்நாடக பட்ஜெட்டில் உயர்த்தப்படும். இதன் மூலம் மதுபானங்கள், பீர் வகைகளின் விலை உயரும். ஆனால் இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக கர்நாடக அரசு, கலால் வரியை உயர்த்தி பீர் விலையை அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.

வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன்படி ரூ.10 முதல் ரூ.40 வரை பீர் விலை அதிகரிக்கப்பட உள்ளது. குறிப்பாக சில குறிப்பிட்ட பீர்களின் விலை மட்டுமே உயர்த்தப்பட இருப்பதாக தெரிகிறது.

இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் சில நாட்களில் கலால் துறை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை உயரும் பீர்களின் பழைய மற்றும் புதிய விலை விவரம் பின்வருமாறு:-

இந்த விலை உயர்வின் படி லெஜண்ட் ரூ.145 (பழைய விலை-ரூ.100), பவர் கூல் ரூ.155 (ரூ.130), பிளாக் போர்ட் ரூ.160 (ரூ.145), ஹண்டர் ரூ.190 (ரூ.180), உட்பகர் கிரஸ்ட் ரூ.250 (ரூ.240), உட்பகர் கிளைட் ரூ.240 (ரூ.230) ஆக உயர்த்தப்பட உள்ளது.

ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வை தொடர்ந்து தற்போது கர்நாடகத்தில் பீர் விலையை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், பீர் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com