search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளும் நித்யானந்தா
    X

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளும் நித்யானந்தா

    • கும்பாபிஷேகம் குறித்து தனது எக்ஸ் அக்கவுன்டில் கருத்து தெரிவித்தார்.
    • ஒட்டு மொத்த உலகிற்கும் ஆசி வழங்க இருக்கிறார்.

    சாமியாரும், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியவருமான நித்யானந்தா ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதாக அறிவித்து இருக்கிறார். இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக நித்யானந்தா அறிவித்து இருந்தார். இந்த நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து தனது எக்ஸ் அக்கவுன்டில் கருத்து தெரிவித்துள்ளார்.

    அதில், "அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியை தவரவிடாதீர்கள். பிரான பிரதிஷ்டை மூலம் ராமர் கோவிலின் கருவறைக்கு பாரம்பரிய முறைப்படி அழைக்கப்படுகிறார். அவர் ஒட்டு மொத்த உலகிற்கும் ஆசி வழங்க இருக்கிறார்."

    "முறையாக அழைக்கப்பட்டதன் பேரில், இந்து மதத்தின் பகவான், ஸ்ரீ நித்யானந்தா இந்த பிரமான்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்," என குறிப்பிட்டுள்ளார்.


    பாலியல் குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2010 ஆண்டு கைது செய்யப்பட்ட நித்யானந்தா, பிறகு ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். நித்யானந்தாவுக்கு எதிராக குற்றம்சாட்டிய ஓட்டுனர், 2020-ம் ஆண்டு நித்யானந்தா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தெரிவித்தார்.

    அதிகம் எதிர்பார்க்கப்படும் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நாளை (ஜனவரி 22) மதியம் நடைபெறுகிறது. ஜனவரி 23-ம் தேதியில் இருந்து ராமர் கோவில் பொது மக்கள் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது.

    Next Story
    ×