பாரமதி பயிற்சி விமான விபத்து: முதற்கட்ட விசாரணையை தொடங்கியது விமான போக்குவரத்து இயக்குநரகம்!

பயிற்சி ஒத்திகைக்காக, விமானம் 12.09 மணிக்கு ஓடுபாதையில் நகர்ந்து சென்றது.
Baramati Trainer Aircraft Crash
Published on

மகாராஷ்டிரா மாநிலத்தின் பாராமதி விமான நிலையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பயிற்சியின்போது, ​​ஓடுபாதையில் இருந்து பயிற்சி விமானம் விலகி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், விமானம் விலகி சென்றதற்கான சூழ்நிலைகள் மற்றும் அதற்கான காரணிகளையும் கண்டறிவதற்காக, பொது விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) விமானப் பாதுகாப்பு குழு முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.

விலகி சென்ற விமானம்:

பாராமதி விமானத்தளத்தில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் சுமார் 12:25 மணியளவில், DGCA-ஆல் அங்கீகரிக்கப்பட்ட விமானப் பயிற்சி நிறுவனமான கார்வர் ஏவியேஷன் அகாடமியால் இயக்கப்படும் VT-SEX பதிவு எண் கொண்ட செஸ்னா C172 ரக விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற சம்பவம் நிகழ்ந்தது.

அந்த விமானம், சுற்று மற்றும் தரையிறக்க அவசரநிலை (CL அவசரநிலைகள்) பயிற்சி ஒன்றிற்காக இயக்கப்பட்டு வந்தது. அந்த விமானம், விமான பயிற்றுவிப்பாளர் கேப்டன் சிராக் சசிகாந்த் டோய்ஃபோடேவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது, அதில் பயிற்சி மாணவர் அபிஜீத் ஜுந்த்ரே பயணம் செய்தார்.

பயிற்சி ஒத்திகை:

திட்டமிடப்பட்ட பயிற்சி ஒத்திகைக்காக, விமானம் 12.09 மணிக்கு ஓடுபாதையில் நகர்ந்து சென்றது. ஒத்திகையின் போது, ​​விமானம் லிங்க் பிராவோ வழியாக ஓடுபாதைக்குள் நுழைந்து, ஓடுபாதை 29-இன் தொடக்கப் பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டது; அங்கு, புறப்படுவதை ரத்து செய்யும் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, விமானம் ஓடுபாதை 11-இன் தொடக்கப் பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டு, மற்றொரு புறப்படுவதை ரத்து செய்யும் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

பயிற்சியின் போது, ​​விமானத்தால் தார் ஓடுபாதைக்குள் நிறுத்த இயலவில்லை. அதன் விளைவாக, அது நீட்டிக்கப்பட்ட தார் பரப்பில் இருந்து விலகி, ஓடுபாதை 29-இன் தொடக்க புள்ளியை தாண்டி வலது பக்கமாக விலகி சென்றது. இதன் காரணமாக, அது ஓடுபாதையை விட்டு வெளியே சென்றது.

இந்த சம்பவத்தால் எந்தவொரு காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ பதிவாகவில்லை. விமானத்தின் சுழலி, இயந்திர மூடி மற்றும் முன்புற தரையிறங்கும் சக்கரம் ஆகியவற்றில் சேதம் ஏற்பட்டுள்ளது. சேதம் குறித்த விரிவான மதிப்பீடு தகுந்த அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com