search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தல் பத்திர திட்டம்: வெளிச்சத்துக்கு வந்த மேலும் ஒரு முறைகேடு
    X

    தேர்தல் பத்திர திட்டம்: வெளிச்சத்துக்கு வந்த மேலும் ஒரு முறைகேடு

    • தேர்தல் பத்திர திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டால் ரத்துசெய்யப்பட்டது.
    • தேர்தல் பத்திர திட்டத்தில் மேலும் ஒரு முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    புதுடெல்லி:

    தேர்தல் பத்திர திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டால் ரத்துசெய்யப்பட்டது. 2018 முதல் 2024 வரை தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்ததற்காக மத்திய அரசிடமிருந்து ரூ.10.68 கோடி பாரத ஸ்டேட் வங்கி கமிஷன் பெற்றுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்வியின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், தேர்தல் பத்திர திட்டத்தில் மேலும் ஒரு முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    ஒரு நிறுவனம் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவு செய்தால்தான் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்க முடியும் என்பது நிறுவனங்கள் சட்டம். மீறுவது சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்ட தேர்தல் பத்திர தகவல்களின்படி, நிறுவனம் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடையாத சுமார் 20 நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு 103 கோடி ரூபாயை நிதியாக வழங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில், இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் பிரசாந்த் பூஷன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தேர்தல் பத்திரங்கள் ஊழல் என்ற பெயரில் பல மோசடிகள் செழித்து வளர்ந்தன. ஒப்பந்தங்களுக்கான பத்திரங்கள், கொள்கை மாற்றங்களுக்கான பத்திரங்கள், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ, மருந்துக் கட்டுப்பாட்டாளரிடமிருந்து பாதுகாப்பிற்கான பத்திரங்கள், ஜாமீன் பெறுவதற்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து ஒப்புதல் பெறுவதற்கும் பத்திரங்கள், பணமோசடிக்கான பத்திரங்கள், புதிதாக தயாரிக்கப்பட்ட நிறுவனங்களின் பத்திரங்கள் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×