search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமனம்- குடியரசுத் தலைவர் ஒப்புதல்
    X

    நீதிபதி, டி.ஒய்.சந்திரசூட்

    உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமனம்- குடியரசுத் தலைவர் ஒப்புதல்

    • தற்போதைய தலைமை நீதிபதி நவம்பர் 8ந் தேதி ஓய்வு பெறுகிறார்.
    • புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் அடுத்த மாதம் பொறுப்பேற்கிறார்.

    உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக இருந்து வரும் யு.யு.லலித் நவம்பர் 8ந் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதற்கான ஒப்புதலை வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். நவம்பர் 9ந் தேதி முதல் உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 1998-ம் ஆண்டு கூடுதல் சொலிசிடர் ஜெனரலாக பணியாற்றிய டி.ஒய்.சந்திரசூட், 2013ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார். பின்னர் 2016-ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். தற்போது உச்சநீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் டி ஒய் சந்திரசூட் 2024-ம் ஆண்டு நவம்பர் 10ந் தேதி வரை தலைமை நீதிபதியாக நீடிப்பார்.

    Next Story
    ×