ரியல் எஸ்டேட் நிறுவனம் தொடங்கிய அனில் அம்பானி

ரிலையன்ஸ் எனர்ஜி லிமிடெட்டின் கீழ் இந்த நிறுவனம் இணைக்கப்பட்டுள்ளது.குறைந்த விலையில் வீடுகள் கட்டிக்கொடுக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனமாக செயல்படும் எனக் கூறப்படுகிறது.
ரியல் எஸ்டேட் நிறுவனம் தொடங்கிய அனில் அம்பானி
Published on

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (Reliance Infrastructure) தனது தொழிலை விரிவடையச் செய்யும் வகையில் தற்போது புதிதாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தை தொடங்கியுள்ளது. அந்த நிறுவனத்தறி்கு ஆர்.ஜே.பி.பி.எல். (Reliance Jai Properties Private Limited) எனப் பெயரிட்டுள்ளார்.

இந்த நிறுவனம் மூலம் மலிவான விலையில் வீடு கட்டிக்கொடுப்பதுதான் இலக்கு என அனில் அம்பானி நிறுவனம் தெரிவித்தள்ளது. ஏப்ரல் மாதத்தில் அனில் அம்பானி நிறுவனத்தின் பங்கு மதிப்பு 308 ரூபாய் இருந்தது. தற்போது 225.85. ரூபாய் அளவிற்கு குறைந்துள்ளது இந்த நிலையில் அனில் அம்பானி நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

பிரதம மந்திரி வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தை குறிவைத்து குறைந்த விலையிலான வீடுகளை கட்டுக்கொடுக்கம் வேலையை குறிவைத்து இந்த நிறுவனத்தை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் எனர்ஜி லிமிடெட்டின் கீழ் கடந்த 12-ந்தேதி ரிலையன்ஸ் ஜெய் பிராப்பர்ட்டிஸ் தனியார் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. சொத்துக்கள் கையகப்படுத்துதல், விற்பனை செய்தல், குத்ததைக்கு விடுதல் போன்ற இந்த நிறுவனம் ஈடுபட உள்ளது.

சில மாதங்களுக்கு முன் வாங்கிய கடனை செலுத்த முடியாததால் இவருடைய நிறுவனங்கள் திவால் அடையும் நிலைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com