search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உண்மைத்தன்மை அறிந்து செய்திகளை வெளியிட வேண்டும் - மத்திய மந்திரி அறிவுறுத்தல்
    X

    மத்திய மந்திரி அனுராக் தாக்குர்

    உண்மைத்தன்மை அறிந்து செய்திகளை வெளியிட வேண்டும் - மத்திய மந்திரி அறிவுறுத்தல்

    • ஆசிய பசிபிக் ஒளிபரப்புக்கான ஐக்கிய பொது சபைக்கூட்டத்தில் மத்திய மந்திரி அனுராக் தாக்குர் பங்கேற்றார்.
    • அப்போது பேசிய அவர், ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செய்தி வெளியிட வேண்டும் என கூறினார்.

    புதுடெல்லி:

    ஆசிய பசிபிக் ஒளிபரப்புக்கான ஐக்கிய பொது சபைக்கூட்டத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மந்திரி அனுராக் தாக்குர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    நிலநடுக்கம், தீ விபத்து மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் போன்றவற்றுடன் தொடர்புடைய செய்திகளை ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் வெளியிட வேண்டும்.

    பயங்கரவாத தாக்குதல் தொடர்புடைய செய்திகளை லைவாக வெளியிடும்போது, தாக்குதல் நடத்துபவர்களுக்கு வழிகாட்டும் வகையிலான தடயங்களை அளிப்பதோ, அவர்களின் தவறான நோக்கங்களுக்கு இடமளித்து விடக்கூடாது என்பது உறுதி செய்து கொள்ளப்பட வேண்டும்.

    உலகம் முழுவதும் கொரோனா நெருக்கடியானது நம் அனைவருக்கும் சோதனையான காலகட்டமாக உள்ளது.

    ஊரடங்கின்போது வெளியுலகுடன் மக்களை இணைக்கும் பணியை ஊடகங்கள் செய்தன. அதுபோன்ற தருணங்களில் சரியான மற்றும் தக்க தருணத்தில் தகவல்களை வழங்குவது என்பதும் ஊடகங்களின் கடமையாகும் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×