search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாநிலங்களவைக்கு போட்டியின்றி  தேர்வான ஆம் ஆத்மி வேட்பாளர்கள்
    X

    மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வான ஆம் ஆத்மி வேட்பாளர்கள்

    • டெல்லியில் ஜனவரி 19 ம் தேதி ராஜ்ய சபா தேர்தல் நடைபெற உள்ளது
    • ஆம் ஆத்மியின் மூன்று வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்

    டெல்லியில் காலியாக உள்ள ராஜ்ய சபா இடங்களுக்கு மூன்று பேரை ஆம் ஆத்மி பரிந்துரை செய்ய வேண்டும். தற்போது ஆம் ஆத்மியின் ராஜ்ய சபா உறுப்பினர்களாக உள்ள சஞ்சய் சிங் மற்றும் என்.டி.குப்தா வின் பதவி காலம் ஜனவரி 27 அன்று முடிவடைகிறது. இருவரையும் மேலவை உறுப்பினர்களாக நியமனம் செய்ய ஆம் ஆத்மியின் அரசியல் விவகாரக் குழு முடிவு செய்துள்ளது. அதனைத்தொடர்ந்து மூன்றாவது வேட்பாளராக டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக உள்ள ஸ்வாதி மாலிவாலை ராஜ்ய சபா தேர்தலில் வேட்பாளராக ஆம் ஆத்மி நியமித்துள்ளது.

    டெல்லியில் ஜனவரி 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் ஜனவரி 3-ம் தேதி தொடங்கியது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி இன்றுடன்(ஜன.12) முடிவடைந்த நிலையில், இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் ஆம் ஆத்மியின் மூன்று வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×