search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: இந்தியா கூட்டணி சார்பில் வரும் 22-ம் தேதி நாடுதழுவிய போராட்டம்
    X

    எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: இந்தியா கூட்டணி சார்பில் வரும் 22-ம் தேதி நாடுதழுவிய போராட்டம்

    • கூட்டம் முடிந்த பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்தார்.
    • பாராளுமன்ற அத்துமீறல் குறித்து பிரதமர், உள்துறை அமைச்சரிடம் விளக்கம் கேட்பதில் என்ன தவறு என்றார்.

    புதுடெல்லி:

    'இந்தியா' கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதல் மந்திரி ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட 28 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    இந்தியா கூட்டணி சார்பில் டிசம்பர் 22-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெறும்.

    கட்டடம் திறப்புக்குச் செல்லும் பிரதமர் மோடி பாராளுமன்றம் வர மறுக்கிறார்.

    பாராளுமன்ற அத்துமீறல் குறித்து பிரதமர், உள்துறை அமைச்சரிடம் விளக்கம் கேட்பதில் என்ன தவறு உள்ளது? என கேள்வி எழுப்பினார்.

    Next Story
    ×