search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    75வது சுதந்திர தின கொண்டாட்டம்-  நாட்டின் முக்கிய பகுதிகள் மூவர்ண விளக்குகளால் அலங்கரிப்பு
    X

    ராஜஸ்தான் சாலை

    75வது சுதந்திர தின கொண்டாட்டம்- நாட்டின் முக்கிய பகுதிகள் மூவர்ண விளக்குகளால் அலங்கரிப்பு

    • கர்நாடகா சட்டப்பேரவைக்கு மூவர்ண விளக்குகளால் அலங்காரம்.
    • வைதர்ணா அணை தண்ணீர் மூவர்ண லேசர் விளக்குகள் மின்னுகிறது.

    நாட்டின் 75வது சுந்திர தின கொண்டாட்டம் இன்று தொடங்கி உள்ள நிலையில், அனைத்து மாநிலங்களிலும் உள்ள முக்கிய பகுதிகளில் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டுள்ளன.


    இது பர்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள உஜானி அணை மூவர்ணங்களால் ஒளிருகிறது.

    பெங்களூருவில் உள்ள கர்நாடகா மாநில சட்டப்பேரவையான விதான் சவுதா கட்டிடம் மூவர்ண விளக்குகளில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    இதேபோல் அசாம் தலைமைச் செயலகம், கவுகாத்தி உயர்நீதிமன்றம், டெல்லி குதும்பினார், ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் சட்டப்பேரவை உள்ளிட்டவையும் விளக்குகள் அலங்காரத்தில் மின்னுகிறது.சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

    மும்பையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான வைதர்ணா அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் மூவர்ண லேசர் விளக்குகள் மின்னுகிறது.

    Next Story
    ×