search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சூரிய மின்சக்தி உற்பத்தியால் இந்தியாவின் எரிபொருள் செலவில் ரூ.34 ஆயிரம் கோடி சேமிப்பு
    X

    சூரிய மின்சக்தி உற்பத்தியால் இந்தியாவின் எரிபொருள் செலவில் ரூ.34 ஆயிரம் கோடி சேமிப்பு

    • கடந்த 10 ஆண்டுகளில் சூரிய மின்சக்தியின் வளர்ச்சி அதிகரித்து உள்ளது.
    • சீனா அதிகமான தொகையை சேமித்துள்ளது.

    புதுடெல்லி :

    எரிசக்தி அமைப்பான 'எம்பர்' ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளில் சூரிய மின்சக்தியின் வளர்ச்சி அதிகரித்து உள்ளது. சூரிய மின்சக்தி உற்பத்தி அதிகமாக உள்ள முதல் 10 நாடுகளில் 5 நாடுகள் ஆசிய கண்டத்தில் உள்ளன. இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, வியட்நாம் ஆகியவையே அந்த நாடுகள். இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய 7 ஆசிய நாடுகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி காரணமாக, கடந்த ஜனவரி மாதம் ஜூன் மாதம்வரை எரிபொருள் செலவில் மொத்தம் 34 பில்லியன் டாலர் சேமிக்கப்பட்டுள்ளது.

    இந்த தொகை, மேற்கண்ட நாடுகளில் செலவான மொத்த எரிபொருள் செலவில் 9 சதவீதம் ஆகும்.

    இவற்றில், சீனா அதிகமான தொகையை சேமித்துள்ளது. 2 ஆயிரத்து 100 கோடி டாலர் எரிபொருள் செலவை சேமித்துள்ளது. அந்நாட்டின் மின்சார தேவையில் 5 சதவீதம், சூரிய மின்சக்தியால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

    அடுத்தபடியாக, ஜப்பான் 560 கோடி டாலர் எரிபொருள் செலவை சேமித்துள்ளது.

    3-வது இடத்தில் இந்தியா உள்ளது. மேற்கண்ட 6 மாத காலத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தி மூலம் இந்தியா, எரிபொருள் செலவில் 4.2 பில்லியன் டாலரை (சுமார் ரூ.34 ஆயிரம் கோடி) சேமித்துள்ளது. அதாவது, 1 கோடியே 94 லட்சம் டன் நிலக்கரியின் பயன்பாடு சேமிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இதை பயன்படுத்தி இருந்தால் நெருக்கடி அதிகரித்து இருக்கும்.

    வியட்நாம், 170 கோடி டாலர் எரிபொருள் செலவையும், தென்கொரியா 150 கோடி டாலர் செலவையும், தாய்லாந்து 21 கோடி டாலர் செலவையும், பிலிப்பைன்ஸ் 7 கோடியே 80 லட்சம் டாலர் செலவையும் சேமித்துள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×