உத்தரகாண்ட் பேருந்து விபத்து - பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரிப்பு

திருமணத்துக்குச் சென்றவர்களின் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் 33 பேர் பலியாகினர், 19 பேர் காயமடைந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.
உத்தரகாண்ட் விபத்து
உத்தரகாண்ட் விபத்து
Published on

டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் மாவட்டம் லால்தாங் பகுதியில் இருந்து நேற்று இரவு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 50 பேர் அதில் பயணம் செய்தனர். பிரோகல் பகுதியில் சிம்ரி என்ற இடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என தகவல் வெளியானது.

தகவலறிந்த காவல்துறையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 21 பேர் இரவோடு இரவாக உயிருடன் மீட்கப்பட்டனர் என டிஜிபி அசோக்குமார் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உத்தராகாண்டில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது என்றும் காயமடைந்த 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என போலீசார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்ததுடன், அவர்கள்து குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அளித்து உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com