

திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ராஜ்ண்ணா சிர்சில்லா மாவட்டம், நம்பள்ளி கிராமத்தின் புறநகர் பகுதியில் 30 குரங்குகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதுகுறித்து வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இறந்து கிடந்த குரங்குகளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குரங்குகளை யாராவது விஷம் வைத்து கொன்றார்களா? அல்லது வேறு எதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
போலீசார் கூறுகையில், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு குரங்குகள் இறந்ததற்கான காரணம் தெரிய வரும் என்றனர்.