search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அக்டோபர் 1 முதல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
    X

    அக்டோபர் 1 முதல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

    • டெல்லியில் 51-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது.
    • இதில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் 51-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடந்தது.

    காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநில அரசுகளின் சார்பில் நிதி அமைச்சகத்தின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    இந்தக் கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழக அரசின் தடையை பாதிக்காத வகையில் 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும். அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்படும். இது அமல்படுத்தப்பட்டு 6 மாதத்துக்குப் பிறகு இந்த முடிவு குறித்து மதிப்பாய்வு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×