search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    300 அடி போர்வெல் குழிக்குள் விழுந்த இரண்டரை வயது குழந்தை - மயங்கிய நிலையில் மீட்டும் உயிரிழந்த பரிதாபம்
    X

    300 அடி போர்வெல் குழிக்குள் விழுந்த இரண்டரை வயது குழந்தை - மயங்கிய நிலையில் மீட்டும் உயிரிழந்த பரிதாபம்

    • ஆழ்துளை குழிக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு குழந்தையை மீட்கும் முயற்சிகள் நடைபெற்றன.
    • மயங்கிய நிலையில் மீட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

    போபால்:

    மத்தியப் பிரதேச மாநிலத்தின் செஹோர் மாவட்டம் முங்காவ்லி கிராமத்தில் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றின் குழிக்குள் இரண்டரை வயது குழந்தை தவறி விழுந்தது.

    தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் மற்றும் ஜே.சி.பி. இயந்திரங்களுடன் விரைந்து வந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கினர். 100 அடி ஆழத்தில் குழந்தை சிக்கி இருந்தது. இரவு, பகல் பாராமல் மீட்பு பணி மேற்கொண்டனர்.

    இந்நிலையில், சுமார் 55 மணி நேர போராட்டத்திற்கு பின் அக்குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்டதாக தகவல் வெளியானது.

    மீட்கப்பட்ட பெண் குழந்தை அங்கிருந்த ஆம்புலனஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    300 அடி போர்வெல் குழிக்குள் விழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×